நம்நாட்டில் தொன்மையான வழிபாட்டு மரபுகள் இருக்கின்றன. சில மூதாதையர் வழிபாடாகவும்,மேலும் சில கிராம தெய்வ அல்லது , பெருதெய்வ வழிபாடாகவும், மற்றும் சில உயர் தத்துவ வழிபாடாகவும் வெளிப்பட்டு பரிணமித்து உள்ளன. இந்த மூன்று வழிபாட்டு மரபும் தான் கர்ம , பக்தி மற்றும் ஞான யோகமுறைகள் என்று வேத மார்க்கங்களிலும் பகவத் கீதையிலும் அனாதிகாலமாய் சொல்லப்பட்டிருக்கிறது. இதானால் தான் விவேகானந்தர் இந்த சனாதன தர்மத்தை "mother of all religions" என்று கூறினார். "akasaath pathitham thoyam yadha gachadhi saagaram; sarva deva namaskaram sri kesavam pradhigachathi" என்ற கீதை ஸ்லோகத்தின் வாயிலாக விவேகானந்தர் தன்னுடைய சிகாகோ சொற்பொழிவில் எந்தக் கடவுளைக் கும்பிட்டாலும் அது நீரோடையாய் கடலை சென்று அடைவதைப்போல கேசவனையே நோக்கிச்செல்லும் என்று ஞானிகள் அறிவர் என்று ஆரம்பித்தார்.. அதனால் கருப்பண்ணசாமியை கும்பிட்டாலும் , கிருஷ்ணஸ்வாமியை கும்பிட்டாலும் ஒன்றுதான்! அதனினும் மேலாக உன்னையே நீ அறிவாய் என்று த்யானித்தாலும் அதுவும் ஒன்றுதான். நாம் ஆன்மிகத்தின் ஒன்றாம் கிளாஸில் இருக்கும்போது கருப்பண...
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!