Skip to main content

Posts

Showing posts from February, 2022

‘கோவிட்’-‘மஹா மாரி’யம்மா!!

தீண்டாமை எனும் வியாதி,  திரும்பி வந்தது ‘கோவிட்’டாய்!,  ‘ரெட்டை டம்ளரை’ வீட்டுக்குள்   அழைத்து வந்தது அதிரடியாய்! ,  “தள்ளி நில் தொடாதே”,  ஆச்சார பாட்டியாய்,  என்னிடம் சமூக இடைவெளி கேட்டது !  “கை, கால் அலம்பாமல்  வீட்டுக்குள் வராதே”  விரட்டிய அம்மாவை விஞ்சியது!  ‘சோப்பையும் போட்டு   கழுவிக்கொண்டே இருந்தால் மட்டுமே  தலை தப்பித்தாய்’   தாயாய் தனயனைக் கொஞ்சியது!.  பெரியவரிடம் பேசினால்  வாயைப் பொத்தி பேசணும்- ஒருபடி  மேலே சென்று வாயை மூக்கை  ரெண்டையும் மூடியே  வைத்து பேசணும்- தீயாய் எச்சரித்து சென்றதம்மா!- அது கண்ணுக்கு தெரியாத ‘மஹா மாரி’யம்மா