புலமைக்கு ஒருஅணி பாரதியார்; புதுமைக்கு ஒருமுடி பாரதியார்; புவியினிலே அவனோர் கவியரசன்; புரட்சியிலே அவனோர் மெய்வீரன் ! ஊறும் மணற்கேணியன்றிவர் பாட்டு! பாற் கேணியாமவர் தம் கூற்று! ஏறின் பீடுநடை தெறிக்கும் கருத்து! வீறு கொண்டேழுப்பும் செயலுக்கு! தேனின்ப மட்டுமன்று தமிழ்ச் செவிக்கு! மேனியுள்ளமெங்கும் பரவு அமிழ்து! ஊனுயிர் ஊட்டும் அவரின் செப்புமொழி! வானமெங்கும் பாடும் குயில் மொழி! அச்சமில்லை என்றே முழங்கினான் அவன்; ஆணுக்கு சமானம் புதுமைப் பெண் என்றான் ; இச்சகத்து உளோரெல்லாம் எதிர்த்து நின்றிடினும், இனியொரு விதிசெய்வோம் தனியே என்றான்! காவெனக் கத்திடும் காக்கையை அழைப்பான்; கானக அரசன் சிங்கமாய் கர்ஜிப்பான்; பாரினில் ஒருவனுக்கு உணவில்லை என்றால் பாரையே அழி...
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges, economics, business, politics, sports and spirituality and on all the other subjects about which I know very little !!